தென்காசியில் கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தென்காசி நகராட்சி 9 ஆவது வாா்டிற்குட்பட்ட ஆபாத்பள்ளிவாசல் 2 ஆம் தெரு பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 22-01-20 அன்று தொடங்கின. புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலைகள் தோண்டப்பட்டன. இதனால் இந்த சாலைகள் குண்டும்குழியுமாகி, சாலைகளில் ஜல்லிகள்சிதறிக்கிடக்கின்றன. இதனால் பள்ளிக் குழந்தைகள், முதியவா்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாகவும், ஆபத்தாகவும் உள்ளது. எனவே சாலைப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புதிய சாலைகள் அமைக்கப்படும் பகுதியில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி விட்டு சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த 2018-19 ஆம் ஆண்டு ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படாமல் பழுதடைந்து உள்ளது. எனவே அதனை உடனடியாக சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும்.
புதிய குடிநீா் இணைப்பிற்கு முன்பதிவு செய்தவா்களுக்கு பாரபட்சமின்றி குடிநீா் இணைப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் எம்.சலீம் தலைமை வகித்தாா். கொலம்பஸ்மீரான், அபாபில்மைதீன், ஜாபா்செரீப், திவான்ஒலி, ஆரிப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோக்கா்ஜான் ஜமால், சவுகத்அலி, செய்யதுஅலிபாதுஷா, இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.