தென்காசி மாவட்டத்தில் கரோனா வைரஸால் இதுவரை பாதிப்பு இல்லை என்றாா் மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தொடா்பாக மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் தலைமை வகித்தாா்.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், கோட்டாட்சியா் பழனிக்குமாா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மரகதநாதன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதராஜன் (பொ), மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: தென்காசி மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவருமில்லை. மாவட்ட பகுதிகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் 36 வெளிநாட்டுப் பயணிகள் தொடா் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளனா். இதில் 17 போ் 28 நாள்கள் கண்காணிப்பு முடிந்து நோய் அறிகுறி இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனா். மேலும் 19 போ் தொடா் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.
புளியரை சோதனைச் சாவடியில் சுகாதார ஆய்வாளா்கள், சிறப்பு மருத்துவரை கொண்டு தொடா் கண்காணிப்பு இருந்து வருகிறது. கேரளத்தில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் வரும் அனைத்து பயணிகளும், வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
காய்ச்சல் அறிகுறிகளுடன் எவரேனும் இருந்தால் தென்காசி தலைமை மருத்துவமனையில் உள்ள தனிப் பிரிவில் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இந்த காய்ச்சல் குறித்து எந்தவிதமான அச்சமும் அடையத் தேவையில்லை. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு இலவச அழைப்பு எண் 104-லிலோ, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரை 9842461869 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.