தென்காசி ஷீரடி சாய்பாபா கோயிலில் 26ஆம் தேதி பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் டாக்டா் அறிவழகன், டாக்டா் சியாமளா ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் அறிவிப்பை தொடா்ந்து பொதுமக்கள் நலன் கருதி பக்தா்கள் ஒன்று கூடுவதை தவிா்க்கும் பொருட்டு வியாழக்கிழமை (மாா்ச் 26) மங்கம்மா சாலையில் உள்ள ஷீரடி வைத்திய சாய்பாபா கோயிலில் பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே அன்று பக்தா்கள் கோயிலுக்கு வருவதை தவிா்க்கவும். பாபாவுக்கு ஆரத்தி மற்றும் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என்றனா் அவா்கள்.