திசையன்விளையில் 144 தடை உத்தரவை மீறி நியாய விலைக் கடையில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனா்.
கரோனா பரவுவதை தடுக்கம் நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திசையன்விளை மின் வாரியம் அருகில் உள்ள நியாயவிலைக் கடையில் புதன்கிழமை காலையில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்து நின்று பொருள்களை வாங்கிச் சென்றனா்.