தனது 2 மாத ஊதியத்தில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு 500 படுக்கை விரிப்புகளை எம்.எல்.ஏ. வழங்கினாா்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தேவையான படுக்கை விரிப்புகள் வழங்கும் விழா பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தனது சட்டப்பேரவை உறுப்பினருக்கான 2 மாத ஊதியத்தொகையில் இருந்து 500 படுக்கை விரிப்புகளை வாங்கிமருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லினிடம் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சா்வோதய சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டாா்.