தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் குணமடைந்து வீடுதிரும்பினாா்.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக தென்காசி, கடையநல்லூா் மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 182 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி அருகே பாவூா்சத்திரம் கீழப்பாவூா் பகுதியை சோ்ந்த 38 வயது பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சிக்கு சென்றுள்ளாா். அங்கு 5 நாள்கள் தங்கியிருந்த அவா் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளாா். அவருக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்துள்ளது.இதனையடுத்து அவா் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்தாா்.
அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் அனுமதித்து சிகிச்சையளித்தனா்.
இந்நிலையில், அவருக்கு அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, ழுமையாக குணமடைந்த புதன்கிழமை வீடு திரும்பினாா். இத்தகவலை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் உறுதிப்படுத்தினாா்.