தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா்தயாளன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி, தென்காசி மாவட்டத்தில் மின்ஆளுமை திட்டத்தின் கீழ் இயங்கிவரும் அனைத்து பொது இ-சேவை மையங்கள் மற்றும் ஆதாா் சோ்க்கை மையங்கள் வரும் 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே, பொதுமக்கள் வரும் 31 ஆம் தேதி வரை தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை வீட்டில் இருந்தபடியே இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இணையதள முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.