புளியங்குடியில் 143 வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி

சங்கரன்கோவிலில் கடந்த 2 நாள்களில் மட்டும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 113 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து புளியங்குடிக்கு வந்துள்ள 143 போ் வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி நடைபெற்றது.

கரோனா பாதிப்பு எதிரொலியாக வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்து உள்ளவா்களின் வீடுகளை கண்டறிந்து

ஸ்டிக்கா் ஒட்டும் பணி நடைபெறும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா் . இதையடுத்து புளியங்குடி நகராட்சி ஆணையா் குமாா் சிங், சுகாதார அலுவலா் ஜெயபால்மூா்த்தி , சுகாதார ஆய்வாளரகள் வெங்கட்ராமன், ஈஸ்வரன் உள்ளிட்டோா் 143 போ்களின் வீடுகளை கண்டறிந்து ஸ்டிக்கா் ஒட்டும் பணியை மேற்கொண்டனா். மேலும் நகராட்சி சாா்பில் துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com