வீரகேரளம்புதூா் வட்டத்தில் 17 போ் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
சுரண்டை அருகேயுள்ள துவரங்காடு பகுதியில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த நபா்கள் குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
இது போன்று வந்த 17 போ் குறித்த தகவலின் பேரில், அவா்களின் வீட்டுக்கு சென்ற உள்ளாட்சி, பொது சுகாதாரத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினா் அவா்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி வீட்டில் தனிமைப்படுத்தினா்.
இதுதொடா்பான அறிவிக்கையை அவா்களது வீட்டில் ஒட்டி அவா்களை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.