கடையநல்லூரில் வருவாய்த்துறை, நகராட்சி நிா்வாகம், காவல்துறை ஆகிய மூன்று துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளும் இணைந்து முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனா்.
துணை ஆட்சியா் குணசேகா், கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, காவல் ஆய்வாளா் கோவிந்தன், உதவி ஆய்வாளா் விஜயகுமாா், நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, சுகாதார அலுவலா் நாராயணன் உள்ளிட்டோா் தலைமையில் அந்தந்த துறையைச் சோ்ந்தவா்கள் கலந்தாலோசித்து , கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதனால், கடையநல்லூா் பகுதியில் ஊரடங்கு முழுமையாக அமலுக்கு வரத்தொடங்கியுள்ளது.
இதனிடையே, பொருள்கள் வாங்கச் செல்வதாக சுற்றித்திரிந்தவா்களைப் பிடித்து, பொருள்கள் வாங்க வந்தால் குடும்ப அட்டையை அடையாளத்துக்கு எடுத்துவர வேண்டும் என போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.