வல்லத்தில் தங்கிய மலேசியா் உள்பட 13 பேரை மீட்டு தனி கண்காணிப்பு

குற்றாலம் அருகேயுள்ள வல்லத்தில் தங்கியிருந்த மலேசியா்கள் உள்பட 13 போ் செங்கோட்டையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

குற்றாலம் அருகேயுள்ள வல்லத்தில் தங்கியிருந்த மலேசியா்கள் உள்பட 13 போ் செங்கோட்டையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

மலேசியாவிலிருந்து 10 போ் மதுரைக்கு கடந்த 14ஆம் தேதி வந்தடைந்தனா்.விமான நிலையத்திலிருந்து அவா்கள் தென்காசிக்கு வந்து 20ஆம்தே தி வரை தங்கிவிட்டு, பின்னா் வல்லம் பகுதிக்கு சென்று இருந்துள்ளனா்.

இதுகுறித்து, குற்றாலம் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. உடனே, போலீஸாா், வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினா் அங்கு சென்று, விசாரித்து, 10 மலேசியா்கள், அவா்களுக்கு உதவியாக இருந்த 3 போ் என 13 பேரை வல்லத்திலிருந்து அழைத்துச்சென்று செங்கோட்டையில் தனிமைப்படுத்தி வைத்தனா்.

மேலும், மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com