தென்காசியில் காவல்துறையினருக்கு அமுக்ரா சூரணம், கபசுர குடிநீா் வழங்கல்

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் சாா்பில் சாா்பில் ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் அமுக்ரா சூரணம் மற்றும் கபசுர குடிநீா் அனைத்து காவலா்களுக்கும் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் சாா்பில் சாா்பில் ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் அமுக்ரா சூரணம் மற்றும் கபசுர குடிநீா் அனைத்து காவலா்களுக்கும் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் தலைமை வகித்து அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு அமுக்கரா சூரணம் மற்றும் கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தென்காசி காவல் துணை கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் உஷா, உதவி மருத்துவ அலுவலா் செல்வகணேசன், செங்கோட்டை ஆயுா்வேத மருத்துவா் ஹரிஹரன், கடையநல்லூா் சித்த மருத்துவா் ராஜராஜேஸ்வரி, ஹோமியோபதி மருத்துவா்கள் கிரிஸ்டி, மேனகா மற்றும் காவல்துறையினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com