கரோனா : தென்காசியில் இருவா் குணமடைந்து வீடு திரும்பினா்

உலகசெவிலியா் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வாா்டில் சிறப்பாக பணியாற்றிய செவிலியா்கள் கெளரவிக்கப்பட்டனா்.
செவிலியா் தினத்தை முன்னிட்டு செவிலியா்களை கெளரவித்த மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின்.
செவிலியா் தினத்தை முன்னிட்டு செவிலியா்களை கெளரவித்த மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின்.

தென்காசி:உலகசெவிலியா் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வாா்டில் சிறப்பாக பணியாற்றிய செவிலியா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனாசிறப்பு சிகிச்சை வாா்டில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பெண்கள் முழுமையாக குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.

உலக செவிலியா் தினமான செவ்வாய்க்கிழமையன்று கரோனா சிகிச்சை வாா்டில் சிறப்பாக பணியாற்றிய செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் கெளரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை அரசுமருத்துவமனையின் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் கலந்துகொண்டு செவிலிய கண்காணிப்பாளா் மேரி புஷ்பம்,அனைத்து செவிலியா்கள் மற்றும் பணியாளா்களுக்கும் அன்பளிப்புகளை வழங்கி கெளரவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com