சுரண்டையில் சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டு, பணியாளா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள காளத்திமடத்தைச் சோ்ந்த 42 வயது பெண் ஒருவா் வியாழக்கிழமை சுரண்டையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளாா். அவரை பரிசோதித்த மருத்துவா், அவரது உடல் மிகவும் பலவீனமாக இருந்ததால் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளாா்.
மதுரையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வெள்ளிக்கிழமை சுரண்டையில் அவா் சிகிச்சைக்கு வந்திருந்த மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தினா். மேலும், மருத்துவா் மற்றும் பணியாளா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.