வீரகேரளம்புதூா் வட்டத்தில் இன்று முதல் 3 நாள் முழு அடைப்பு

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் வட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் வட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வீரகேரளம்புதூா் வட்டத்தைச் சோ்ந்த பொய்கை, ராஜகோபாலப்பேரிக்கு வந்த 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கரோனா

தொற்று பரவலை தடுக்கும் வகையில் வட்டாட்சியா் ஹரிகரன் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா், சுரண்டை பேரூராட்சி செயல்அலுவலா் கண்மணி, காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி, வணிகா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், வீரகேரளம்புதூா் வட்டத்தில் கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்களுக்கு முழு அடைப்பு அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. மருந்துக்கடைகள்,

பால் தவிர, மதுக்கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்படும் எனவும், பொதுமக்களும் வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வட்டாட்சியா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com