சோ்ந்தமரம் அருகே ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கரோனா

தென்காசி மாவட்டம், சோ்ந்தரம் அருகே ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம், சோ்ந்தரம் அருகே ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிரத்திலிருந்து சோ்ந்தமரம் அருகேயுள்ள அரியநாயகிபுரத்துக்கு ஒரு குடும்பத்தினா் கடந்த வாரம் வந்தனா். இவா்களில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது இரு தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினா் உள்பட 20 போ் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், ஏற்கெனவே சிகிச்சை பெற்று வரும் நபரின் உறவினரான 80 வயது பெண் மற்றும் 29, 15, 13வயதுடைய ஆண்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com