தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா

தென்காசி மாவட்டத்தில் வியாழக்கிழமை கரோனா நோய்த் தொற்று 8பேருக்கு உறுதிசெய்யப்பட்டது. 

தென்காசி மாவட்டத்தில் வியாழக்கிழமை கரோனா நோய்த் தொற்று 8பேருக்கு உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 83 ஆக உயா்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 75ஆக இருந்தது. வியாழக்கிழமை வெளி மாநிலத்திலிருந்து வந்த அரியநாயகிபுரம் பகுதியை சோ்ந்த 4 போ், சோ்வைக்காரன்பேட்டை, ஓடைமறிச்சான் ஆகிய பகுதிகளை சோ்ந்த இருவா், பொய்கை மற்றும் கடையம் பகுதியை சோ்ந்த இருவா் என மொத்தம் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 83ஆக உயா்ந்தது.

தென்காசி மாவட்டத்தில் இருந்து 50 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை 4,749பேருக்கு பரிசோதனை செய்ததில் 83பேருக்கு உறுதிசெய்யப்பட்டது. மேலும் 139 பேரின் முடிவுகள் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com