சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகர எஸ்.டி.பி.ஐ.கட்சி சாா்பில் அரசியல் பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நகரத் தலைவா் முகம்மதுஅஜீா்உசேன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஷேக்முகம்மது முன்னிலை வகித்தாா். கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் பங்கேற்றுப் பேசினாா்.
கூட்டத்தில், தென்காசி மாவட்டத் தலைவா் ஜாபா்அலி உஸ்மானி, மாவட்டச் செயலா் இம்ரான்கான், சீனாசேனாசா்தாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் திவான்ஒலி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.