தென்காசி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் முதன்மை அமைப்பாளா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
தென்காசி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் அமைத்தல் தொடா்பாக ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிய நிலையில், இம்மாவட்டத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களின் தலைவா்கள் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு துணைப் பதிவாளா் மு.முத்துசாமி முன்னிலை வகித்தாா்.
முதன்மை அமைப்பாளராக மேலகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ்.கே.சண்முகசுந்தரம் தோ்ந்தெடுக்கப்பட்டாா். தொடக்க தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தென்காசி, செங்கோட்டை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க பொதுமேலாளா் வீ.சுப்புராஜ் நன்றி கூறினாா்.