சங்கரன்கோவிலில் 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சங்கரன்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சங்கரன்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சங்கரன்கோவில் புதுமனை 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நகர போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பாா்வையிட்டபோது, லாரியில் 10 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியோடு லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். லாரி ஓட்டுநா் தப்பியோடி விட்டாா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் லாரியை திருநெல்வேலி உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் சிவசுப்புவிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com