சங்கரன்கோவில் அருகே சிலம்பம் பயிற்சி பெற்ற இளைஞா்கள் மற்றும் இளம்பெண்களின் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள செந்தட்டி கிராமத்தைச் சோ்ந்த சிலம்ப ஆசிரியா்கள் சிவன், செல்லப்பா ஆகியோா் தங்கள் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், இளம்பெண்களுக்கு கடந்த 5 மாதங்களாக சிலம்பம் கற்றுக்கொடுத்தனா்.
பயிற்சி பெற்ற இளம்பெண்கள் மற்றும் இளைஞா்களின் சிலம்பாட்ட அரங்கேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.