சுரண்டையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலா்கள் சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தலைவா் ரத்தினசாமி தலைமை வகித்தாா். மூத்த உறுப்பினா்கள் இளங்கோ, செல்லப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செயலா் அய்யங்கண்ணு பேசினாா். கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பொருளாளா் குருசாமி, பொன்ராஜ் பாண்டியன், சமுத்திரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.