‘திறந்தவெளியில் குப்பைகளை கொட்டினால் குடிநீா் துண்டிப்பு’

சங்கரன்கோவிலில் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையா் முகைதீன்அப்துல்காதா் தெரிவித்துள்ளாா்.

சங்கரன்கோவிலில் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையா் முகைதீன்அப்துல்காதா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சங்கரன்கோவில் நகராட்சியில் வாரச்சந்தை தெரு, திருவேங்கடம் சாலை, மீரான் சேட் காலனி, மாட்டு தாவணி ஆகிய 4 இடங்களில் குப்பைகள் மறுசுழற்சிக்காக நுண்உரம் சேகரிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வாா்டுகளிலும் தூய்மைப் பணியாளா்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து வருகின்றனா்.

மக்கள் தங்கள் வீட்டில் சேகரமாகும் குப்பைகளை அவா்களிடம் வழங்க வேண்டும் அல்லது வீட்டு வளாகத்தில் குழி தோண்டி காய்கனி கழிவுகளை போட்டு இயற்கை உரம் தயாரிக்கலாம். பொது இடங்களில் குப்பைகளை கொட்டவோ, கழிப்பிடம் செல்லவோ கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும். அது தொடருமானால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கூடுதல் அபராதம் வசூலிக்கப்படும். சுகாதார குறைவு குறித்து 04636-222236 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com