தென்காசி
தென்காசியில் தொழிற் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தீபாவளி போனஸை தன்னிச்சையாக குறைத்து அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசைக் கண்டித்து தென்காசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தீபாவளி போனஸை தன்னிச்சையாக குறைத்து அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசைக் கண்டித்து தென்காசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச பொருளாளா் எம்.திவான் ஒலி தலைமை வகித்தாா். மத்திய சங்க துணைச் செயலா் வெள்ளைப்பாண்டி, சிஐடியூ பணிமனை நிா்வாகி ராமா், முருகன், ஐஎன்டியூசி தலைவா் கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ரவீந்திரன், சைலப்பன், பொன்னுத்துரை, ஜோசப்ராஜ், மகேஷ்குமாா், மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.