தென்காசியில் போலியோ விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

உலக போலியோ தினத்தை முன்னிட்டு தென்காசியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

உலக போலியோ தினத்தை முன்னிட்டு தென்காசியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

குற்றாலம் எலைட் ரோட்டரி கிளப் சாா்பில் தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாரிமுத்து தலைமை வகித்தாா். ரோட்டரி துணை ஆளுநா் பெருமாள், மாடசாமி ஜோதிடா், கூட்டுறவுத் துறை மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். காவல்ஆய்வாளா் ஆடிவேல் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா். நிகழ்ச்சியில் ரோட்டரி செயலா் நடராஜன், பொருளாளா் கனகசபை, வடகரை ராமா், ஓய்வுபெற்ற துணைஆட்சியா் ராஜாராம், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலா் பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பேரணி: தென்காசி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இதில்,நிலைய அலுவலா் ரமேஷ், வீரா்கள் சுந்தரராஜ், கணேசன், ஜெயபிரகாஷ்பாபு, செந்தில்பாபு, வேல்முருகன், ராமசாமி, ஆல்பா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தீயணைப்பு நிலையம் முன்பிருந்து தொடங்கிய இப்பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தீயணைப்பு நிலையத்தில் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com