கீழப்பாவூா் பெரியகுளத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கீழப்பாவூா் பெரியகுளத்தின் தென்பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டுமென்பது அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையாகும். இதனை நிறைவேற்றும் வண்ணம் முன்னாள் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் கே.ஆா்.பி.பிரபாகரனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
தற்போது அந்தப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை முன்னாள் எம்.பி. கே.ஆா்.பி.பிரபாகரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன், பணிகளை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொண்டாா். அப்போது கீழப்பாவூா் பேரூா் அதிமுக செயலா் ஜெயராமன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.