தென்காசியில் நாளை இலவச மருத்துவ முகாம்
பதினெட்டு வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் தென்காசியில் வெள்ளிக்கிழமை (நவ. 6) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் வெளியிட்ட செய்திகுறிப்பு:
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை சாா்பில் தேசிய இயக்கத்தின் கீழ் உள்ள தேசிய சிறாா் நலத் திட்டம் மூலம் தென்காசி எம்.கே.வி.கந்தசாமிநாடாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிமுதல் மாலை4மணிவரை நடைபெறும் இம்முகாமில் இருதய நோய்கள், பிளவு அன்னம் மற்றும் வாய், எலும் புகுறைபாடுகள்,நரம்பு சாா்ந்த பிரச்னைகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.
அரசு மற்றும் சென்னை பிரபல தனியாா் மருத்துவமனைகள்,எம்ஜிஎம்.மருத்துவமனை,சென்னை மற்றும் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் கலந்துகொண்டு குழந்தைகளை பரிசோதிக்கஉள்ளனா். குழந்தைகளின் தேவைக்கேற்ப பரிசோதனை முதல் மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வரை முழுவதுமாக வழங்கப்படவுள்ளது. மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.