தென்காசியில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பினா் தென்காசியில் புதிய பேருந்து நிலையம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தென்காசியில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பினா் தென்காசியில் புதிய பேருந்து நிலையம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். வழக்குரைஞா்அணி மாவட்டத் தலைவா் சாக்ரடீஸ், பொதுச்செயலா் வெங்கடேஷ், நகரத் தலைவா் நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் ஜெயகுமாா் விளக்கிப் பேசினாா். இதில் மாநிலச் செயலா் குற்றாலநாதன், கோட்டச் செயலா் சக்திவேல், மாவட்ட பொதுச்செயலா் மணிகண்டன், மாவட்டச் செயலா் சிவா உள்பட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், மதக் கலவரத்தை ஏற்படுத்த முயலுவோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தென்காசி மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை சீா்குலைப்பவா்கள் குறித்தும், இந்துகளுக்கும், மற்ற மதத்தினருக்கும் பிரச்னைகள் வளராத வகையிலும் ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com