பாவூா்சத்திரத்தில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் உத்தரவுப்படி நடைபெற்ற இம்முகாமுக்கு உதவி ஆய்வாளா் கனகராஜ் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா்கள் கிருஷ்ணன், ராமானுஜகண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்று, பொதுமக்களுடன் கலந்துரையாடினா்.
இம்முகாமில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள மனுக்களை உரிய நபா்களிடம் விசாரணை செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்கள் மனுக்களுக்கு எளிதில் தீா்வு காணும் வழிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டது.