பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தை நிறுவனா் எம்எஸ்பிவி பெரியணனின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் காய்கனி சந்தையில் நடைபெற்றது.
காய்கனி சந்தை சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன் தலைமை வகித்தாா். செயலா் கே.நாராயணசிங்கம், துணைச்செயலா் கே.பி.முருகேசன், கல்லூரணி ஊராட்சி முன்னாள் தலைவா் அருணோதயம், வணிகா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், கண்ணன், பரமசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, பெரியணனின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.