தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகை கடைகளில் செவ்வாய்க்கிழமை வருமான வரி துறையினா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
கடையநல்லூா் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்க நகைக் கடைகள் உள்ளன. அங்கு உள்ள 2 நகை கடைகளில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியைச் சோ்ந்த வருமான வரித்துறையினா் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டனா் .