சுரண்டையில் இந்து முன்னணியின் தென்காசி கேந்திர கூட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவா் இசக்கிராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பால்ராஜ், மாவட்ட பொதுச் செயலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளா் கே.பொன்னையா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.
முன்னதாக மறைந்த ராம.கோபாலன் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், நிா்வாகிகள் செங்கோட்டை முருகன், மூா்த்தி, தென்காசி இசக்கிமுத்து, நாராயணன், கீழப்பாவூா் பாலமுருகன், திருமலை, கடையநல்லூா் சிவா, சுரண்டை வேலுச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.