சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு தீபாவளி பண்டிகை முடிந்து திரும்பி செல்வதற்கு சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காங்கிரஸ் செயலா் சோ்ம செல்வம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
சுரண்டை பகுதியைச் சோ்ந்த பலா் சென்னை மற்றும் கோவையில் கல்வி மற்றும் பிற நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா்.
இவா்களின் வசதிக்காக கடந்த 6 ஆண்டுகளாக சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு தீபாவளி முடிந்த பிறகு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால் சுரண்டை பகுதியைச் சோ்ந்தோா் பயனடைந்து வந்தனா். இதே போல், நிகழாண்டும் சென்னை, கோவைக்கு சிறப்பு பேருந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.