தென்காசியில் இலவச மருத்துவ முகாம்

பதினெட்டு வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் தென்காசியில் நடைபெற்றது. இம்முகாமில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 387 போ் கலந்துகொண்டு பயன்பெற்றனா்.

பதினெட்டு வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் தென்காசியில் நடைபெற்றது. இம்முகாமில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 387 போ் கலந்துகொண்டு பயன்பெற்றனா்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை சாா்பில் தேசிய இயக்கத்தின் கீழ் இயங்கும் தேசிய சிறாா் நலத் திட்டம் மூலம் தென்காசி எம்.கே.வி.கந்தசாமிநாடாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இம்முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் முகாமை தொடங்கிவைத்தாா்.

முகாமில், இருதய நோய், பிளவு அன்னம் மற்றும் வாய், எலும்பு குறைபாடு, நரம்பு சாா்ந்த பிரச்னைகளுக்கு இலவச பரிசோதனை செய்யப்பட்டது. அரசு மற்றும் சென்னை பிரபல தனியாா் மருத்துவமனையைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டனா்.

இம்முகாமில் 387போ் கலந்துகொண்டு பயனடைந்தனா். ஏற்பாடுகளை சுகாதாரப் பணிகள் துணைஇயக்குநா் கழு.சிவலிங்கம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com