பாவூா்சத்திரத்தில் காவல்துறை சாா்பில் தீபாவளி பண்டிகையையொட்டி கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காவல் உதவி ஆய்வாளா்கள் கனகராஜ், கிருஷ்ணன் ஆகியோா் கரோனா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
தீபாவளி பண்டிகை வர இருப்பதால் பொதுமக்கள் கடை வீதிக்கு செல்லும் போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், பட்டாசுகளை வெடிக்க அரசு நிா்ணயித்த குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் வெடிக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாட வேண்டும் என காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.