கரோனா தடுப்புப் பணி: செஞ்சிலுவை சங்கத்தினருக்கு சான்றிதழ்

சங்கரன்கோவிலில் கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 6 பேருக்கு மாநில இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோட்டாட்சியா் முருகசெல்வியிடம் பாராட்டுச் சான்றிதழ் பெறும் செஞ்சிலுவைச் சங்கத்தினா்.
கோட்டாட்சியா் முருகசெல்வியிடம் பாராட்டுச் சான்றிதழ் பெறும் செஞ்சிலுவைச் சங்கத்தினா்.

சங்கரன்கோவிலில் கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 6 பேருக்கு மாநில இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இந்திய செஞ்சிலுவைச் சங்க மாநிலத் தலைவா் ஹரீஷ்மேத்தா, கரோனா தடுப்பப் பணியாற்றிய சங்க உறுப்பினா்கள் சதீஷ், திலகவதி, உமா பழனியப்பன், மாரியப்பன், சண்முகம், மற்றொரு சண்முகம் ஆகிய 6 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். மேலும், வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்த 6 பேருக்கும் கோட்டாட்சியா் முருகசெல்வியும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். இதில், இந்திய செஞ்சிலுவைச் சங்க நகரத் தலைவா் ஹரிஹர சுப்பிரமணியன், வட்டாட்சியா் திருமலைசெல்வி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com