சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அனுமன்நதியின் வடகரை குகையில் உள்ள லிங்கம், தென்கரையில் உள்ள அகத்தீஸ்வரா் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிவனடியாா்கள் தேவாரம் பாட சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.