திருநெல்வேலியில் 26 போ், தென்காசியில் 8 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்றால் 14,504 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை மேலும் 26 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,530 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 14,052 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 269 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 209 போ் உயிரிழந்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கீழப்பாவூா், குருவிகுளம், செங்கோட்டை பகுதியில் தலா ஒருவா், தென்காசியில்4 போ் என 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,922ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை 5 போ் உள்பட இதுவரை 7,686 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 81 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.