சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன் தலைமையிலான வேளாண் அதிகாரிகள் இந்த திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி திடல்களை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர் சுமன் மற்றும் கருவந்தா விவசாயிகள் உடனிருந்தனர்.