சங்கரன்கோவில் நகைக்கடை பஜாரில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சங்கரன்கோவில் பிரதான சாலையில் நகைக்கடை பஜாரில் உள்ள இரும்பு மின்கம்பம் ஞாயிற்றுக்கிழமை திடீரென சரிந்து ஆபத்தான நிலையில் இந்த மின்கம்பம் உள்ளது. தற்போது கனமழை பெய்து வருவதால் அந்த மின்கம்பத்தால் விபத்து நேரிடும் முன் அதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.