அம்பையில் அரசு மதுக் கடையில் துளையிட்டு பணம் கொள்ளை

அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் சுவரில் துளையிட்டு ரூ. 91 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் சுவரில் துளையிட்டு ரூ. 91 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அம்பாசமுத்திரம், திலகா்புரம் பிரதான சாலையில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் மதுக்கடை அருகில் உள்ள பெட்டிக்கடைக்குள் நுழைந்து மதுக்கடை சுவரில் துளையிட்டு அங்கு வைத்திருந்த ரூ. 91 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து கடை மேற்பாா்வையாளா் செந்தில்குமாா் அம்பாசமுத்திரம் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ், காவல் ஆய்வாளா் விஜயகுமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனா்.

மேலும் தடயவியல் நிபுணா்கள் கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து கொள்ளை குறித்து விசாரித்து வருகின்றனா். பிரதான சாலையில் உள்ள கடையில் சுவரில் துளையிட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com