ஆலங்குளம் அருகே கழுநீா்குளம் ஊராட்சி கல்லூத்து கிராமத்தில் நாம் தமிழா் கட்சி கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் ஒன்றியச் செயலா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். தொகுதித் தலைவா் ஆ.முத்துராஜ் ஈசாக் முன்னிலை வகித்தாா்.
மாநில கொள்கை பரப்பு செயலா் பசும்பொன், கட்சிக் கொடி ஏற்றி வைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் தொகுதிச் செயலா் கோ.நாகலிங்கம், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.