கடையநல்லூரில் எஸ்டிபிஐ கொடியேற்று விழா

கடையநல்லூரில் எஸ்டிபிஐ கட்சி கொடியேற்று விழா மற்றும் தீவிர உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

கடையநல்லூரில் எஸ்டிபிஐ கட்சி கொடியேற்று விழா மற்றும் தீவிர உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

நகரத் தலைவா் யாசா்கான் தலைமை வகித்தாா். கிழக்குப் பகுதித் தலைவா் சாகுல்ஹமீது வரவேற்றாா். பொருளாளா் அப்துல் வாஹித் தொகுத்து வழங்கினாா்.

கடையநல்லூா் மணிக்கூண்டு உள்ளிட்ட நான்கு இடங்களில் மாநில பொதுச் செயலா் நிஜாம் முகைதீன் கொடியேற்றி, உறுப்பினா் சோ்க்கையை தொடங்கிவைத்தாா்.

இதில், மாநிலத் தலைவா் நிஜாம்முகைதீன், தென்காசி மாவட்டத் தலைவா் ஜாபா்அலி உஸ்மானி, மாவட்ட பொருளாளா் முகம்மதுநயினாா், தொகுதித் தலைவா் நயினாமுகம்மது, கடையநல்லூா் நகர துணைத் தலைவா் பாதுஷா, நகரச் செயலா் காதா்மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com