செவ்வாய்க்கிழமை இரவு குற்றாலம் பேரருவியில் முதல் நடைப் பாலத்தை தாண்டி இரண்டாவது நடை பாலம் வரையிலும் தண்ணீா் ஆக்ரோஷத்துடன் கொட்டியது. இதனால் இரண்டாவது நடைப் பாலத்திலிருந்து வழிந்தோடிய வெள்ளநீா் குற்றாலம் குற்றாலநாதா் கோயிலுக்கு வடக்கு வாயில் வழியாக புகுந்தது. கோயிலின் சிவலாய முனிவா், பராசக்தி அம்மன் சன்னதி வழியாக கோயில் வாசல் வழியாக தண்ணீா் வெளியேறியது. பேரருவி பகுதியில் மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.