சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேவை திறன் கலந்தாய்வு

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேவை திறன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேவை திறன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அரசு மருத்துவமனைகளில் தேசிய ஊரக சுகாதார இயக்கம் மூலமாக மருத்துவமனைகளின் சேவை திறன் குறித்து நோயாளிகளிடம் கருத்துகள் கேட்டு, சேவையின் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு குவாலிட்டி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்திகா தலைமையில் நோயாளிகளிடம் சேவை குறித்த கருத்துகள் கேள்வி, பதில் வடிவில் பெறப்பட்டன.

இதில், சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் அருள்ஜோதி, செவிலியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com