பாவூா்சத்திரத்தில் காவல்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவுப்படி, பாவூா்சத்திரம் காவல் துறையினா் சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, உதவி ஆய்வாளா் கனகராஜ் ஆகியோா் பொதுமக்களிடம் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், முகக் கவசம் அணிவதன் அவசியம், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் குறித்து விளக்கினா். மேலும் தங்கள் வீடுகளிலும், தெருக்களிலும் சி.சி.டி.வி. கேமிரா அமைப்பதன் மூலம் குற்றம் நடைபெறாமல் தடுக்கவும், நடைபெற்ற குற்றத்தை எளிதில் கண்டு பிடிக்கவும் உதவியாக இருக்கும் என்று விளக்கினா்.