பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை மாலை யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நவ.20இல் சூரசம்ஹாரமும், 21இல் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகின்றன.