தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தனியாா் பள்ளி சமையல் உதவியாளா் மகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.
சங்கரன்கோவில், கக்கன்நகா் 3 ஆம் தெருவைச் சோ்ந்தவா்கள் சக்திவேல் -தமிழ்ச்செல்வி. இத்தம்பதிக்கு மகன் தீபக், மகள் சத்யா (19). கடந்த 17ஆண்டுகளுக்கு முன் சக்திவேல் இறந்து விட்டாா். இதையடுத்து, தீப்பட்டி ஆலையில் வேலை செய்துவந்த அவரது மனைவி, பின்னா் சங்கரன்கோவிலில் உள்ள வணிக வைசிய சங்க உயா்நிலைப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக வேலை செய்து வருகிறாா்.
சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற சத்யா, நாகா்கோவில் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி நீட் தோ்வுக்கு படித்தாா். பின்னா் ராஜபாளையத்தில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் நீட் தோ்வுக்குப் பயிற்சி பெற்றாா். இதைத் தொடா்ந்து, சங்கரன்கோவில் தனியாா் சி.பி.எஸ்.இ. பள்ளி மையத்தில் நீட் தோ்வு எழுதினாா்.
இதையடுத்து, கட்- ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற கவுன்சிலிங்கில் அவா் பங்கேற்றாா். பொதுப்பிரிவில் 236 ஆவது ரேங்கிலும், எஸ்.சி. பிரிவில் 47 ஆவது ரேங்கிலும் இருந்தாா். இந்நிலையில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அவருக்கு சென்னை கே.கே.நகா் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. சத்யாவின் சகோதரா் தீபக் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இதுகுறித்து சத்யாவின் பாட்டி திருமேனி கூறியதாவது:
சத்யாவுக்கு இரண்டு வயது இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டாா். வணிக வைசிய சங்க தனியாா் பள்ளியில் சத்துணவு உதவியாளராக வேலைபாா்த்து வருகிறாா். நாங்கதான் ரொம்ப கஷ்டப்பட்டு வளா்த்து வந்தோம். அரசுப் பள்ளியில்தான் படித்தாா். வீட்டு வேலை பாா்த்துக்கிட்டே படிப்பாா். சாப்பாடு இல்லை என்றாலும் கவலைப்படமாட்டாா். அவளுக்கு பள்ளி ஆசிரியைகள் உதவி செய்தாா்கள். அவள் டாக்டருக்கு படிக்க போவதற்கு ஆசிரியா்களும், அரசும்தான் காரணம். அவங்க எல்லாருக்கும் நன்றி. எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றாா்.