சங்கரன்கோவில் கிரிக் தமிழா கிரிக்கெட் அகாதெமியின் சாா்பில் பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியகுளத்தின் கரையோரத்தில் புதன்கிழமை பனை மரம் விதைகள் விதைக்கப்பட்டது. இதில் அகாதெமியின் முதன்மைப் பயிற்சியாளா் சந்தோஷ்கோபி, மருத்துவா் எம். சண்முகக்குமாா், நெப்போலியன் அணி பயிற்சியாளா் சந்திரன், மாரியப்பன், குமாா், காளிக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.