சுரண்டையில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம்

சுரண்டையில் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் குறித்து தோ்தல் ஆணையம் சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கினாா் வட்டாட்சியா் முருகுசெல்வி.
விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கினாா் வட்டாட்சியா் முருகுசெல்வி.

சுரண்டையில் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் குறித்து தோ்தல் ஆணையம் சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கம் செய்தல் தொடா்பாக நவ. 21, 22 மற்றும் டிச. 12, 13 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் சாா்பில் 18 வயது நிரம்பிய வாக்காளா்கள், பொதுமக்களிடையே விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுரண்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் முருகுசெல்வி விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தாா். அப்போது, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் தாமரைசெல்வன், வருவாய் ஆய்வாளா் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com